சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதேசமடம் மற்ற டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், ஷிவம் தூபே மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 30 ரன்களைச் சேர்த்தார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என 135 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
Trending
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அரைசதம் கடந்துடன், 23 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி, அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், "தொடரை இழந்ததில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம், ஆனால் சில விஷயங்களை நாங்கள் சிறப்பாகச் செய்துள்ளோம், மேலும் சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். இந்த பாணியிலான கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படவும் சிறப்பாக செயல்படவும் நாங்கள் விரும்புகிறோம்.
இப்போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பிரைடன் கார்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியா ஒரு அற்புதமான அணி, குறிப்பாக சொந்த மண்ணில். மேலும் வான்கடேயில் இதுபோன்ற பெரிய கூட்டத்தின் அனுபவத்தை பெற்றது சிறப்பான ஒன்று. நான் நிறைய கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன், அதில் அபிஷேக் சர்மாவின் இந்த இன்னிங்ஸ் மிகச் சிறந்த ஒன்று என நினைக்கிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டிக்கான முழு பாராட்டும் அபிஷேக் சர்மாவுக்கு தான். ஏனெனில் நான் பார்த்தில் மிகச்சிறந்த ஆட்டம் இது என நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தற்போது நாங்கள் ஒருநாள் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மேலும் எங்கள் அணியில் உலகின் தலைசிறந்த வீரரான ஜோ ரூட் இணைந்துள்ளார். அதனால் இது ஒரு சிறந்த தொடராக இருக்கும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now