Advertisement

இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!

இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கேட்டால் அவர்களின் ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய அணியை வீழ்த்துவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 15, 2024 • 23:06 PM
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்! (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள அந்த தொடரில் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி வரும் இங்கிலாந்து கடந்த 2 வருடங்களில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகிறது. எனவே இம்முறை சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்தியாவில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

Trending


இந்நிலையில் இந்த தொடரில் கொஞ்சம் சுமாராக செயல்பட்டாலும் பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் புதிய அதிரடி அணுகுமுறையை கிண்டலடித்து படுக்கையில் படுக்க வைக்க இந்திய ரசிகர்கள் காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “இந்தியா காத்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டைப் பற்றி நிறைய பேச்சுக்கள் காணப்படுகிறது. அதே போல பஸ்பால் எனப்படும் இங்கிலாந்தின் அணுகுமுறை பற்றியும் நிறைய கருத்துக்கள் இருக்கிறது.

அந்த 2 அணிகளும் விரைவில் மோத உள்ளது. அங்கே இந்திய ரசிகர்கள் பஸ்பாலை பார்த்து படுக்கையில் படுக்க வைப்பதற்கு காத்திருக்கின்றனர். ஒருவேளை இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கேட்டால் அவர்களின் ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய அணியை வீழ்த்துவார்கள். ஒருவேளை இந்திய அணி நிர்வாகம் லாட்டரி போன்ற பிட்ச்களை கேட்டால் அது அதிகமாக சுழலும்.

அந்த நிலையில் இங்கிலாந்தும் ஸ்பின்னர்களை கொண்டு வரும். ஒருவேளை பந்து அதிகமாக சுழன்றால் ஜோ ரூட் இங்கிலாந்தின் முக்கிய வீரராக இருப்பார். டக்கெட் நன்றாக விளையாடுவார். சுழலுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் மகத்தான வீரர். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த சுற்றுப்பயணத்தில் எதற்கும் சாதகம் இல்லாத மைதானத்தில் அவர்கள் எளிதாக ஒரே நாளில் 500 ரன்கள் அடித்தனர்.

ஆனால் அதே போல நம்முடைய பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் அடிக்க முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள். கிரேம் ஸ்வானிடம் கடந்த வாரம் சமநிலையை பற்றி பேசினேன். 2012 தொடரில் இந்தியாவில் அலெஸ்டர் குக் 190, பீட்டர்சன் 180 ரன்கள் அடித்தனர். அந்த 2 இன்னிங்ஸ் வித்தியாசமானது. ஆனால் மிகவும் வெற்றிகரமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement