
நடப்பாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம்பட்டிருக்க ரஹானே அணியில் இடம் பெற்றார். 512 நாட்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்குள் திரும்பிய அவர் நேற்று மிகச் சிறப்பாக விளையாடி முக்கியமான நேரத்தில் 89 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அணிக்குள் மீண்டும் வந்த அவர் தனது பேட்டிங் டெக்னிக்கில் சில மாற்றங்களை செய்து விளையாடுகிறார். அவருடைய நம்பிக்கையும் மிகச் சிறப்பான முறையில் இருக்கிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அதிரடியாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டத்தை வெல்வதற்கு முக்கியக் காரணமாகவும் விளங்கினார்.
அவர் தற்போது சிறப்பாக விளையாடினாலும் அவரது பேட்டிங் டெக்னிக் தனக்கு முழுத்திருப்தியாக இல்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் வீரரும் ஆன ஆகாஷ் சோப்ரா அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.