
Aakash chopra on India playing 11 against South africa (Image Source: Google)
ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகிறது. சொந்த மண்ணிலேயே நடைபெறும் இந்த போட்டி வரும் ஜூன் 9ம் தேதி டெல்லியில் தொடங்கி ஜூன் 19ம் தேதி முடிவடைகிறது.
இதற்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. கேப்டனாக கே.எல்.ராகுல், துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணி முழுவதும் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு உறுதுணையாக சீனியர்கள் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆனால் இதில் இருந்து ப்ளேயிங் 11-ஐ தேர்ந்தெடுப்பது தான் சிரமமான விஷயம். ஏனென்றால் இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர்.