
இந்திய அணியின் வெஸ்ட் இண்டிஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இடம்பெற்றார். தொடக்க வீரரான இவர் அணியில் இடம் பெற்றதும் ஏற்கனவே துவக்க வீரராக விளையாடி வந்த ஷுப்மன் கில் தன்னை மூன்றாவது வீரராக கீழே இறக்கிக் கொள்ள தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்டு கீழே இறக்கி கொண்டார்.
இந்த முறை இவரது துவக்க இடத்தில் வந்த அறிமுக டெஸ்ட் வீரர் ஜெய்ஷ்வால் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தற்பொழுது ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் உடன் களத்தில் நிற்கிறார். அறிமுகவீரராக இந்திய அளவில் மட்டும் இல்லாது உலக அளவிலும் சில சாதனைகள் செய்வதற்கு அவருக்கு தற்பொழுது மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது.
அதே சமயத்தில் தமது துவக்க இடத்தை விட்டுக் கொடுத்து மூன்றாவது இடத்தில் வந்த ஷுப்மன் கில் எதிர்பார்ப்புக்கு மாறாக 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்த முறை அவரது தரத்திற்கு மிகவும் குறைவாக இருந்தது என்பதுதான் உண்மை. தற்பொழுது இவரது ஆட்டம் பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது பற்றி கொஞ்சம் விரிவாகவே பேசி இருக்கிறார். இதற்கு முன்பாக இந்தியாவில் வைத்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் கில் ஆட்டம் இழந்ததை வைத்து உதாரணம் காட்டி இருக்கிறார்.