Advertisement

ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

Advertisement
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 16, 2025 • 07:47 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 16, 2025 • 07:47 PM

முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். மேற்கொண்டு எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Trending

இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும் என்பதனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ரம் அல்லது மேத்யூ பிரீட்ஸ்கி ஆகியோரில் ஒருவர இரண்டாவது தொடக்க வீரராக இருப்பார் என்று கூறியுள்ளார். மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசை வீரராக நிக்கோலஸ் பூரனைத் தேர்வு செய்த அவர், 4ஆவது மற்றும் 5ஆவது இடங்களில் ரிஷப் பந்த், டேவிட் மில்லர் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் மூவரும் இடதுகை பேட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து 6ஆம் இடத்தில் அவர்கள் ஆயூஷ் பதோனி அல்லது அப்துல் சமத் ஆகியோரில் ஒருவர் வாய்ப்பு பெறுவார் அதனைத்தொடர்ந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக ஷபாஸ் அஹ்மத், ரவி பிஷ்னோய் ஆகியொரைத் தேர்வு செய்த அவர் வேகப்பந்து வீச்சாளர்களாக ஆகாஷ் தீப், ஆவேஷ் கான், மெஹ்சின் கான் அல்லது மயங்க் யாதவ் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதில் மயங்க் யாதவின் உடற்தாகுதியை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

ஆகாஷ் சோப்ரா தேர்வுசெய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம்/மேத்யூ பிரெட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி/அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், அவேஷ் கான், மொஹ்சின் கான்/மயங்க் யாதவ்.

Also Read: Funding To Save Test Cricket

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப்,  ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement