
ஐபிஎல் தொடரின் வெற்றியை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளும் டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் டி20 லீக் தொடர்கள் இந்தாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இதில் தென் ஆப்பிரிகாவில் நடைபெற்றுவம் தென் ஆப்பிரிக்க டி20 லீக் தொடரானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், அத்தொடரின் அணிகளை வாங்கியுள்ளது தான். அதுமட்டுமின்றி நட்சத்திர வீரர்கள் மற்றும் உள்ளூர் வீரர்கள் ஆகியோர் அடுத்தடுத்து தங்களது திறமைகளை அங்கு நிரூபித்து வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்ஏ20 லீக் தொடரானது இளைஞர்கள் திறனை வளர்க்க உதவியாக இருக்கும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ‘மிஸ்டர் 360’ ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.