Advertisement

ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஏபி டி வில்லியர்ஸ்!

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்த நான்கு அணிகள் முன்னேறும் என்ற கணிப்பை தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஏபி டி வில்லியர்ஸ்!
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த ஏபி டி வில்லியர்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 21, 2025 • 04:05 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடர் குறித்த முன்னாள் வீரர்களின் கணிப்புகளும் அதிகரித்துவருகின்றன. அதிலும் குறிப்பாக எந்த அணி பட்டத்தை வெல்லும், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து தங்கள் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 21, 2025 • 04:05 PM

அந்தவகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் பிளேஆஃப்களுக்குச் செல்ல விருப்பமான நான்கு அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளார். இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸின் பெயர் டிவில்லியர்ஸின் பட்டியலில் இல்லை, இது பல ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Trending

இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்த முறை ஆர்சிபி அணியும் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் இந்த முறை அணி சமநிலையில் உள்ளது. அவர்களைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிஅள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறக்கூடிய எனது நான்கு அணிகள் இவைதான். எனது தேர்வில் இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் வரிசையில் சிஎஸ்கேவிற்கு இடமில்லை. அது ஒரு வலுவான அணி, ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றமடையக்கூடும். ஆனால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு அணிகளாக நான் இந்த நான்கு அணிகளுடன் மட்டுமே செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

ஐபிஎல் தொடர் குறித்து பேசினால் நாளை (மார்ச் 22) தொடங்கு இத்தொடரின் லீக் போட்டியானது மே 18ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20 முதலும், தொடரின் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement