
Activists Damage IPL Team Bus In Mumbai (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இதனால் 10 அணி வீரர்களும் மும்பைக்கு படையெடுத்துள்ளனர். ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அதன்படி இத்தொடரில் விளையாடுவதற்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
வீரர்களை ஒட்டலில் இருந்து விளையாடும் இடத்திற்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு அணியின் சார்பில் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அந்த வகையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கான பேருந்து மும்பையில் உள்ள ஓட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்தது.