
ஆஸ்திரேலியா அணி தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்து, இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடருக்கு இரண்டு அணிகளுமே தங்களது அணிகளை அறிவித்திருக்கின்றன. ஆஸ்திரேலியா அணியில் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்ற இருக்கிறார்கள்.
அதே சமயத்தில் இந்திய அணியில் முதல் இரண்டு ஆட்டத்தில் முக்கிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெரிய பிரச்சினையாக இருந்து வருவது, அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பாதான்.
அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். தற்பொழுது அவரை எப்படி எதிர்கொள்வது? அவர் எந்த மாதிரியான பந்துவீச்சாளர்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த அபிநவ் முகுந்த் தன் கருத்தை கூறியிருக்கிறார்.