Advertisement
Advertisement
Advertisement

பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வந்தது வெற்றிகரமாக செயல்பட உதவியது - அக்ஸர் படேல்!

2023 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய நேரங்களில் வீட்டிலிருந்தே பனியின் தாக்கத்தை தவிர்த்து வெற்றிகரமாக செயல்படுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன் என ஆட்டநாயகன் விருது வென்ற அக்ஸர் படேல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 02, 2023 • 12:04 PM
பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வந்தது வெற்றிகரமாக செயல்பட உதவியது - அக்ஸர் படேல்!
பந்துவீச்சில் மாற்றங்களைக் கொண்டு வந்தது வெற்றிகரமாக செயல்பட உதவியது - அக்ஸர் படேல்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்று முடிந்த 4 டி20 போட்டிகளில் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற முக்கியமான 4ஆவது போட்டியில் மீண்டும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக இளம் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் அதிரடியாக 46, ஜித்தேஷ் சர்மா 35, ஜெயஸ்வால் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து 175 ரன்கள் துரத்திய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 154/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

Trending


அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ வேட் 36 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் பட்டேல் 3, தீபக் சஹார் 2 விக்கெட்டுகளை சாய்ந்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அக்ஸர் பட்டேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அவர், “வீட்டில் இருந்த போது நான் நிறைய அம்சங்களை முயற்சித்தேன். அவை இன்று நன்றாக வந்தது. குறிப்பாக என்னுடைய பலத்தின் அடிப்படையில் பந்து வீசிய நான் அதற்காக சில முறை அடி வாங்கினாலும் கவலைப்படாமல் செயல்பட்டேன். மேலும் ஸ்டம்ப் லைனில் வீசினால் பனியின் தாக்கத்தை தவிர்க்க முடியும் என்பதையும் உணர்ந்து செயல்பட்டேன்.

பொதுவாக டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அடி வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அட்டாக் செய்யும் மனநிலையுடன் பந்து வீச வேண்டும். அதை பின்பற்றி சில விக்கட்டுகளை நீங்கள் எடுத்தால் நல்ல உணர்வை கொடுக்கும். காயத்தை சந்தித்த தருணங்களில் நான் என்னை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினேன். குறிப்பாக என்னுடைய பந்து வீச்சில் சில வேரியசன்களை கொண்டு வந்தது தற்போது வெற்றிகரமாக செயல்பட உதவியது” என்று கூறியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement