
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா அணி ஏறக்குறைய 7 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளது.
ஐந்தாவது இடத்தில் , பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் உடனும் உள்ளன. இந்த நிலையில் ஆறாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் உள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் ஆஸ்திரேலிய அணியும் வரும் ஏழாம் தேதி மோத உள்ளனர். இந்த நிலையில் இந்தப் போட்டியின் முடிவு இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது ஆஃப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் அரசு ஆஃப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட்டுக்கு தடை விதித்திருக்கிறது. இதனை காரணம் காட்டி கடந்த ஜனவரி மாதம் ஆஃப்கானிஸ்தானுடன் தாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என ஆஸ்திரேலிய அணி அறிவித்து.