Advertisement

உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்!

நாங்கள் தயார் செய்துள்ள மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்குமெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டியில் வெற்றிபெற அதிக சாதிகம் இருக்கும் என பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 18, 2023 • 12:00 PM
உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்!
உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆடுகளம் எப்படி இருக்கும்? பிட்ச் பராமரிப்பாளர் பதில்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நாளை அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நாளைய இந்த இறுதிப் போட்டியுடன் நிறைவுக்கு வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேவேளையில் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக ஏற்கனவே அஹ்மதாபாத் சென்றடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் வெற்றியாளர்களை தீர்மானிக்கப்போகும் பல முக்கிய விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Trending


அந்த வகையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்கவுள்ள இந்த போட்டிக்கான மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அஹ்மதாபாத் மைதானத்தின் பராமரிப்பாளர் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இறுதிப் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டுள்ள பிட்ச்சின் மீது அதிக எடையுள்ள ரோலர் பயன்படுத்த பட்டால் இந்த கருப்பு மண் கொண்ட பிட்ச் நிச்சயம் ஸ்லோவாக இருக்கும். இதனால் எந்த ஒரு அணியாலும் பெரிய ஸ்கோர் அடிக்க முடியும் என்றாலும் ரன்களை சேர்ப்பது எளிதாக இருக்காது. தற்போதைக்கு நாங்கள் தயார் செய்துள்ள மைதானத்தின் தன்மை எவ்வாறு இருக்குமெனில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு போட்டியில் வெற்றிபெற அதிக சாதிகம் இருக்கும்.

ஏனெனில் முதலில் பேட்டிங் செய்யும்போது நிச்சயம் அந்த அணியால் 315 ரன்கள் வரை சேர்க்க முடியும். அப்படி சேர்த்தால் அது வெற்றிக்கு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று எங்களால் கூற முடியும். அதே வேளையில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது மைதானம் ஸ்லோவாகும் என்பதால் சேசிங் செய்யும் அணிக்கு ரன்களை சேர்ப்பது சிரமமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தின் படி, நிச்சயம் இறுதி போட்டியில் டாசில் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யதான் ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது. அதேவேளையில் முன்கூட்டியே அகமதாபாத் சென்றடைந்த இரு அணியின் கேப்டன்களும் மைதானத்தின் தன்மையை நேரில் பார்வையிட்டு அதற்கு ஏற்றார்போல் தற்போது தங்களது அணியின் வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement