
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹாம்ஷைர் - லீசெஸ்டர்ஷைர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ஷைர் அணியானது நிக் கிப்பின்ஸ் மற்றும் லியாம் டௌசன் ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக நிக் கிப்பின்ஸ் சதமடித்து அசத்தியதோடு 14 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 136 ரன்களையும், லியாம் டௌசன் அரைசதம் கடந்த கையோடு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 50 ரன்களையும் சேர்த்தனர். லீசெஸ்டர்ஷைர் அணி தரப்பில் டாம் ஸ்கிரீவன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.
அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ரோமன் வால்கர், கேப்டன் லூயிஸ் ஹில், சாலமன் புடிங்கர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த அஜிங்கியா ரஹானே, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 74 ரன்களிலும், அஜிங்கியா ரஹானே 70 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.