Advertisement

எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே!

எனக்கு எந்த பிஆர் (PR) குழுவும் இல்லை, எனது ஒரே பிஆர் என்னுடைய கிரிக்கெட் மட்டுமே என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.

எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே!
எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது - அஜிங்கியா ரஹானே! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 17, 2025 • 08:50 PM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த அஜிங்கியா ரஹானே தனது மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் ரஹானே தனது ஃபார்மை நிரூபித்து மீண்டும் தனக்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 17, 2025 • 08:50 PM

ஏனெனில் அவர் கடைசியாக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியிலும் விளையாடினார். ஆனால் அதில் அவரால் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததன் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டு, அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், ராஜத் பட்டிதார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வர்கிறது. 

Also Read

அதன்பின்னர் ரஹானே உள்ளூர் கிரிக்கெட்ல் மும்பை அணிக்காக அபாரமாக விளையாடி வருவதுடன் தனது ஃபார்மையும் மீட்டு வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் அஜிங்கியா ரஹானே, 12 இன்னிங்ஸ்களில் 437 ரன்கள் எடுத்துள்ளார், இதில் ஹரியானாவுக்கு எதிரான காலிறுதியில் அவர் சதமடித்தும் அசத்தினார். இதுதவிர்த்து சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் அவர் 58.62 என்ற சராசரியில் 469 ரன்களைச் சேர்த்தார். 

இந்நிலையில் அஜிங்கிய ரஹானே சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் எப்போதும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன், இப்போது மனம் திறந்து பேச ஆரம்பித்துவிட்டேன். கிரிக்கெட் விளையாடுவதிலும், வீட்டிற்குச் செல்வதிலும்தான் என் கவனம் இருந்தது. முன்னேற சில விஷயங்கள் தேவைப்படும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இன்றும் கூட, சில சமயங்களில் கிரிக்கெட் விளையாடுங்கள், வீட்டிற்குச் செல்லுங்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது என் கடின உழைப்பைப் பற்றி தான் பேச வேண்டும் என்று என்னிடம் சொல்லப்படுகிறார்கள். ஆனால் சிலர் நீங்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். எனக்கு எந்த பிஆர் (PR) குழுவும் இல்லை, எனது ஒரே பிஆர் என்னுடைய கிரிக்கெட் மட்டுமே. செய்திகளில் இருப்பது முக்கியம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். இல்லையெனில், நான் தேர்வாளர்களின் கவனத்தில் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள்.

நான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்ப விரும்புகிறேன். எனக்கு இன்னும் ஆர்வமும் உற்சாகமும் இருக்கிறது. நான் தற்போது ரஞ்சி கோப்பை விளையாடி வருகிறேன், மும்பை அணிக்காக எனது முழு பலத்தையும் கொடுக்க முயற்சிக்கிறேன். மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பதற்கான எனது இலக்கு தெளிவாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் ரன்களை அடித்ததன் மூலம் டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

Also Read: Funding To Save Test Cricket

ஆனால் அதன் பின்னர் மீண்டும் நீக்கப்பட்டேன். அது எதுவும் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. வீட்டில் அமர்ந்து பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை பார்ப்பது கடினமாக இருந்தது. முன்னதாக, நான் சிறப்பாக செயல்பட்ட போதிலும் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். எனவே, மீண்டும் நான் சிரப்பாக செயல்பட்டு இன்னும் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்று நம்புகிறேன். எனக்குள் இன்னும் கிரிக்கெட் மிச்சமிருக்கிறது." என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement