Advertisement

சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயுடு விருப்பம்!

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan March 11, 2024 • 13:42 PM
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயூடு விருப்பம்!
சிஎஸ்கே அணிக்காக ரோஹித் சர்மா விளையாட வேண்டும் - அம்பத்தி ராயூடு விருப்பம்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கப்படவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாரகி வருகின்றன. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்டவுள்ளன. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுதத ஆண்டு நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகத் தலைவர் அருண் தூமல் நேற்றைய தினம் அறிவித்தார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் புதிய அணியை கட்டமைக்க வேண்டிய பொறுப்பில் அனைத்து அணிகளும் தள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்டதள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய அவர், “எதிர்காலத்தில் ரோஹித் சர்மா சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடி விட்டார். சிஎஸ்கே அணிக்காக விளையாடி அதேபோல் வெற்றிகளை குவித்தால் அது சிறப்பானதாக இருக்கும். ஒருவேளை எம்எஸ் தோனி ஓய்வை அறிவித்தால் சிஎஸ்கேவின் கேப்டன் பதவியும் ரோஹித்தை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா, இந்த சீசனுக்கான மும்பை அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரோஹித் சர்மா உள்பட, பெரும்பாலான மும்பை அணி வீரர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலாம் அடுத்த ஆண்டு நடைபெறும் என்ற அறிவிப்பு வந்தது. மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் எம்எஸ் தோனியும் 42 வயதை எட்டியுள்ளதால், இந்தாண்டு ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் தோனிக்கு பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

தற்போதைய நிலையில் சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் தேர்வாக ரவீந்திர ஜடேஜா உள்ளார். ஆனால் ஏற்கனவே ஜடேஜாவிடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. அவரது தலைமையில் அணி சிறப்பாக செயல்படவில்லை. இதனால் தொடரின் பாதிலேயே எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என முன்னாள் வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement