
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதிலும் இத்தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு, நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் தொடக்க வீரர்களாக அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேற்கொண்டு அணியின் மூன்றாம் வரிசையில் ரச்சின் ரவீந்திராவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ள ராயுடு, நான்காம் இடத்தில் ராகுல் திரிபாதியை சேர்த்துள்ளார். இருப்பினும் அந்த இடத்தில் அவர் மேற்கொண்டு தீபக் ஹூடா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார். அவர்களைத் தொடர்ந்து அணியின் அதிரடி வீரரான ஷிவம் தூபேவுக்கு ராயுது தனது லெவனில் 5ஆம் இடத்தையே ஒதுக்கியுள்ளார்.