
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றில் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் அசத்தி வருகிறது.
இதனால் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ள இந்தியா அடுத்ததாக நாளை தங்களுடைய 7வது போட்டியில் இலங்கையை மும்பையில் எதிர்கொள்கிறது. இதுவரை ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து ஆகிய டாப் அணிகளை தோற்கடித்த இந்தியா இப்போட்டியிலும் இலங்கையை வீழ்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தற்சமயத்தில் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஷமி வரை அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் கண்டிப்பாக சொந்த மண்ணில் இலங்கையை விட இந்தியா வலுவான அணியாகவே கருதப்படுகிறது. அதை விட சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை 2023 தொடரின் மாபெரும் ஃபைனலில் இலங்கையை அதன் சொந்த மண்ணில் 50 ரன்களுக்கு சுருட்டி தெறிக்க விட்ட இந்தியா அபார வெற்றி பெற்று 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.