
Anya Shrubsole falls three short of her fifty and England have declared on 396/9 (Image Source: Google)
இந்திய மகளிர், இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான ஒரு டெஸ்ட் ஆட்டம் நேற்று (ஜூன்16) தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து மகளிர் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. சோபியா டாங்க்லி 12 ரன்களுடனும், கேத்ரின் பிரண்ட் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து இன்று நடைபெற்ற 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பிரண்ட் 8 ரன்களுக்கு ஜுலான் கோஸ்வாமியிடம் ஆட்டமிழந்தார். இதையடுத்து, டன்க்லேவுடன் சோபி எக்லெஸ்டோன் இணைந்தார். இந்த இணை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளித்தது. எக்லெஸ்டோன் நிதானம் காட்ட டாங்க்லி ரன்களைக் குவித்து வந்தார்.