
ஒரு நாள் ,டி20 என அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் நோ பால் வீசுவது என்பது தற்போது பெரும் குற்றமாக மாறிவிட்டது. அதுவும் டி20 கிரிக்கெட்டில் ஒரு நோ பால் வீசினால் அவ்வளவுதான் அடுத்து கிடைக்கும் ப்ரி ஹிட்டை வைத்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.
இப்படி இருக்க ஒரே ஆட்டத்தில் ஐந்து நோபல் வீசினால் என்ன ஆகும். அதுதான் இந்தியா இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் நடந்தது. புனேவில் நடைபெறும் டி20 போட்டியில் சேசிங் செய்யும் அணி அவ்வளவாக வென்றதில்லை என்பது வரலாறு. ஆனால் நமது ஹர்திக் பாண்டியா தலைகீழாக தான் குதிப்பேன் என்று கூறி டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார். மேலும் ஹர்சல் பட்டேலை நீக்கி விட்டு காயத்தில் இருந்த மீண்டு வந்த ஆர்ஸ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கினார்.
பொதுவாக வீரர்கள் மேட்ச் பிராக்டிஸ் இல்லை என்றால் அவர்கள் ஆட்டத்தில் விளையாடுவது மிகவும் கடினம். அதுவும் இந்திய கிரிக்கெட் அணியில் அதிக முறை நோபல் வீசியவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ஆர்ஸ்தீப் சிங். இந்த போட்டிற்கு முன் ஆர்ஸ்தீப் சிங் 9 முறை நோ பால் பேசி இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் வீசிய முதல் ஓவரில் மட்டும் 3 நோ பாலை வீசி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.