
Arun Lal Believes Rishabh Pant Has the Potential to Captain India in the Future (Image Source: Google)
இந்திய அணியின் கேப்டன்சி தோனியிடமிருந்து கோலி, கோலியிடமிருந்து இப்போது ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா மிகச்சிறந்த கேப்டன். இந்திய அணியை தொடர்ச்சியாக வெற்றிப்பாதையில் பயணிக்க செய்துகொண்டிருக்கிறார்.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது. ரோஹித்துக்கு துணை கேப்டன் கேஎல் ராகுல் தான். ஆனால் கேஎல் ராகுல் காயம் காரணமாக சமீபமாக நடந்த தொடர்களில் ஆடவில்லை.
ரோஹித்துக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் இப்போதே தொடங்கிவிட்டது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கேப்டனுக்கான போட்டியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா ஐபிஎல்லில் மிகச்சிறப்பாக கேப்டன்சி செய்து அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.