Advertisement
Advertisement
Advertisement

ஆஷஸ்: ஐந்தாவது டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறும்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan December 09, 2021 • 10:32 AM
Ashes: Cricket Australia CEO confirms fifth Test would be day-night contest
Ashes: Cricket Australia CEO confirms fifth Test would be day-night contest (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 

இத்தொடரின் முதல் போட்டியான நேற்றைய தினம் கபாவில் தொடங்கியது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரை வெல்வதற்காக இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன. 

Trending


இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெர்த் மைதானத்தில் நடைபெற இருந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்திருந்தது. 

இதற்கிடையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய சிஇஓ நிக் ஹாக்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “கரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். இருந்தாலும் இந்த டெஸ்ட் போட்டியானது பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் விளையாடப்படும்” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement