
உலகக் கோப்பைக்கு முன்பாக பயிற்சி பெறும் விதமாக, ஆஸ்திரேலியா அணி இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற, இரு அணிகளுக்கும் இடையேயான இன்று இரண்டாவது போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரது சதம், கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியவரின் அதிரடி அரை சதங்களால் 399 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி மிகப்பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கியது. இரண்டாவது ஓவரில் மேத்யூ ஷார்ட் மற்றும் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்து பிரஷித் கிருஷ்ணா வெளியேற்றி வைத்தார்.
இந்த நிலையில் ஒன்பது ஓவர்கள் ஆட்டத்தில் வீசப்பட்டு இருக்க மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி 33 ஓவராகவும், இலக்கு 317 ரன்கள் ஆகவும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் டேவிட் வார்னர் லபுசேன் உடன் களத்திற்கு வந்தார். ரன் நெருக்கடி இருந்த காரணத்தினால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக டேவிட் வார்னர் விளையாட ஆரம்பித்தார்.