
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க அஸ்வின் செல்லவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்குகிறது.
தற்போது அஸ்வின், அந்த தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகிவிட்டது. இங்கிலாந்துக்கு இந்திய அணி கடந்த 16ஆம் தேதி சென்றது. அதில் அஸ்வின் இடம்பெறாத நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக தான் அவர் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. அஸ்வின் தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார். இதனால் வரும் 24ஆம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொரின் இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு அஸ்வின், தமிழ்நாடு லீக் டிவிசன் வீரர்களுடன் தனது நேரத்தை செலவிட்டார். இதில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. அஸ்வன் வெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்காக மட்டும் இங்கிலாந்து செல்ல வேண்டிய நிலையில், தற்போது கரோனா தொற்று ஏற்பட்டதால் அந்த வாய்ப்பு ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது.