Advertisement

IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்? 

நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 14, 2023 • 22:43 PM
IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்? 
IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?  (Image Source: Google)
Advertisement

நடப்பு ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் தங்களின் கடைசிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து, வங்கதேச அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது.

இந்த காரணத்தினால் நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தி பார்ப்பதற்கு முடிவு செய்யும். முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பும். அந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. 

Trending


ஏனென்றால் தொடர்ந்து மூன்று நாட்கள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் விளையாடியிருக்கிறார்கள். மேலும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்திருக்கிறார்கள். இதன் காரணமாக யாரும் தொடர்ந்து விளையாட வேண்டிய நெருக்கடியில் இல்லை.

எனவே முதலில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படலாம். அவரது இடத்தில் முகமது ஷமி விளையாட வாய்ப்பு அதிகம். மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சர்துல் தாக்கூர் அணிக்குள் வரலாம். தற்போதைய இந்திய அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் விளையாடி வருவதால் யாராவது ஒருவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அந்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் விளையாடலாம். மேலும் அவர் பந்து வீசவும் பயன்படுத்தப்படலாம்.

அணியின் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மா கட்டாயம் விளையாடுவார் என்று தெரிகிறது. மேலும் கில் மற்றும் விராட் கோலி ஓய்வு எடுக்க விரும்ப மாட்டார்கள் ஆகவே தொடர்ந்து விளையாடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு சற்று நேரத்திற்கு முன்பாக முதுகுப் பகுதியில் மீண்டும் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் இன்று பயிற்சிக்கு வந்துள்ளார். 

ஆனாலும் சூரியகுமார் விளையாடவே வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. எனவே ஸ்ரேயாஸ் விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே நாளை பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான் இல்லை கேஎல் ராகுல் என நான்கு வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வாய்ப்பு அதிகம். அதேபோல் ஷமி, ஷர்துல் தாக்கூர், சூர்யகுமார், ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா ஆகியோர் விளையாட வாய்ப்புகள் அதிகம்.

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement