
Asif Ali's double-edged power-hitting master plan for upcoming T20 Asia Cup (Image Source: Google)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வரும் 28ஆம் தேதி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
இந்நிலையில், இப்போட்டிக்காக தினசரி 100 முதல் 150 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி தெரிவித்துள்ளார்.
அவர் சிறப்பு பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பகிர்ந்துள்ளது. அதில் அவர், “நான் பேட் செய்யும் பொசிஷனில் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் தேவைப்படும். அந்த ரன்களை எடுக்க பெரிய ஷாட் ஆட வேண்டும். அதற்கு பயிற்சி ரொம்பவே அவசியம். அதனால்தான் தினசரி பயிற்சியில் 100 - 150 சிக்ஸர்களை விளாச முயற்சி செய்தேன். அதன் மூலம் ஆட்டத்தில் ஒரு 4 அல்லது 5 சிக்ஸர்களை ஸ்கோர் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை.