Advertisement
Advertisement
Advertisement

எனக்கு முன் அஸ்வின் களமிறங்கிய போது கோபமடைந்தேன் - ஷிம்ரான் ஹெட்மையர்!

தனக்கு முன்னதாக அஸ்வின் களமிறக்கப்பட்ட கோபமடையச் செய்தது என ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 05, 2021 • 14:37 PM
At first, I was pissed: Hetmyer on Ashwin coming ahead of him to bat against CSK
At first, I was pissed: Hetmyer on Ashwin coming ahead of him to bat against CSK (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில் டெல்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது. 

இப்போட்டியின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையருக்கு முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வினை களமிறகியது. இது பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ஹெட்மையர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர். 

Trending


ஆனால் அஸ்வின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர். அப்படி இருக்கையில் அஸ்வினை, ஹெட்மையருக்கு முன்னதாக அனுப்பியது பெரும் விவாதமானது. இந்நிலையில் தனக்கு முன்னதாக அஸ்வின் களமிறக்கப்பட்ட கோபமடையச் செய்தது என ஷிம்ரான் ஹெட்மையர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு முன்னதாக அஸ்வின் களமிறங்கிய போது முதலில், நான் கோபமடைந்தேன், பின்னர் அது அணிக்கு தேவையான ஒன்றாக இருந்தது. அணிக்கு எது தேவையோ அதை நாங்கள் செய்வோம். அவர் மோயின் அலிக்கு எதிராக விளையாடவே எனக்கு முன்னதாக களமிறக்கப்பட்டார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அது எங்கள் அணிக்கு மிகப்பெரும் உதவியாகவும் அமைந்தது. ஏனெனில் ஆஃப் ஸ்பின்னருக்கு எதிராக அஸ்வின் ஸ்லாக் ஸ்வீப் அடிப்பதில் வல்லவர். இறுதியில் நாங்கள் நினைத்தது போலவே வெற்றி எங்கள் வசம் வந்தது பெருமகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement