Advertisement

ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!

ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக சமாரி அத்தபத்துவுக்கு அபராதம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2025 • 10:21 PM

இந்தியா - இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியானது இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை வென்ற இந்திய மகளிர் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இலங்கை அணியை பந்துவீச அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 12, 2025 • 10:21 PM

அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 116 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, ஹர்லீன் தியோல் 47 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்ததுடன் அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் கேப்டன் சமாரி அத்தபத்து 51 ரன்களையும், நிலாக்‌ஷி டி சில்வா 48 ரன்களையும், விஷ்மி குணரத்னே 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற  வீரங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது சமாரி அத்தபத்து தனது பந்துவீச்சில் அன்னேரி டெர்க்சன் பவுண்டரி அடித்ததை தொடர்ந்து, ஆக்ரோஷமடைந்த அவர் தனது கண்ணாடிய மைதானத்திலேயே தூக்கி எறிந்து அதனை சுக்குநூறாக உடைத்தார்.

Also Read: LIVE Cricket Score

ஒரு சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள், தரை உபகரணங்கள் அல்லது சாதனங்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வது ஐசிசி நடத்தை விதிப்படி தவறு என்பதால், சமாரி அத்தபத்துவிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதமும், ஒரு கரும்புள்ளியையும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மேலும் சமாரி அத்தபத்துவும் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு  விசாரணை தேவையில்லை என்றும் ஐசிசி தெளிபடுத்தியுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement