
வருகிற மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருந்தது. மேலும் இத்தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கிரிக்கெட் தொடரானது ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,“ஆஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் வாரியத்தின் பங்குதாரர்கள் உடன் நீண்ட ஆலோசனை நடத்திய பிறகு, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி சூப்பர் லீக் சுற்றின் ஒரு அங்கமாக ஆஃப்கானிஸ்தான் உடன் நடைபெறவிருந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது.
ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் மற்றும் பார்க், ஜிம் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக இந்த முடிவானது எடுக்கப்பட்டிருக்கிறது.