
தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.
அதன்படி சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் லிட்ச்ஃபீல்ட் 5 ரன்களிலும், எல்லி பெர்ரி 24 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்தனர். அதன்பின் 60 ரன்கள் எடுத்த நிலையில் அலிசா ஹீலி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தஹ்லியா மெக்ராத் 44 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னர், சதர்லேண்ட், வர்ஹாம், அலனா கிங், கிம் கார்த் என சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.