
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி 2023 உலகக் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் தங்களைப் புறக்கணித்து வரும் இந்தியாவிற்கு சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்து 1992க்குப்பின் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கோப்பையை வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 2023 ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிடம் வரலாறு காணாத அளவுக்கு 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. மேலும் கடைசியில் இலங்கையிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டதால் பாபர் அசாம் – சாஹீன் அஃப்ரிடி போன்ற முக்கிய வீரர்களுக்கு இடையே தோல்வியால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.
அது போக அத்தொடரில் சந்தித்த காயத்தால் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் நாசீம் ஷா காயத்தால் விலகியுள்ளது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இது போக இந்த குறைகளை நிறையாக்கி இந்திய மண்ணில் சரித்திரம் படைப்பதற்காக தயாராகும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் தாமதம் செய்வதாக இந்தியா தாமதம் செய்வதாக நாட்டு வாரியம் நேற்று ஐசிசியிடம் புகார் செய்தது.