
Bairstow Calls A Verbal Exchange With Virat 'Part & Parcel' Of The Game (Image Source: Google)
பிர்மிங்கமில் நடைபெற்றுவரும் 5ஆவது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 84.5 ஓவர்களில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி, 61.3 ஓவர்களில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சதமடித்த பேர்ஸ்டோவ், 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிராஜ் 4, பும்ரா 3, ஷமி 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
இதன்மூலம் 3ஆம் நாள் முடிவில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 45 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. பும்ரா 50, ரிஷப் பந்த் 30 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸில் கோலி - பேர்ஸ்டோவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உன் வேலையை மட்டும் பார் என கோலி சைகையில் பேர்ஸ்டோவிடம் கூறியது போல இருந்தது. எனினும் பேர்ஸ்டோ சதமடித்தபோது கோலி கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார்.