
BAN vs PAK, 3rd T20I: Pakistan again restricted Bangladesh by low score (Image Source: Google)
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் மூன்றாவது டி20 போட்டியிலும் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் நஜ்முல் ஹுசேன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து களமிறங்கிய ஷாமிம் ஹொசைன் 22 ரன்னிலும், அஃபிஃபி ஹொசைன் 20 ரன்னிலும் உஸ்மான் காதிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.