
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகளில் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
அதன்படி, இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் – ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இதில் 40 பந்துகளில் 3 பவுண்டரிகளை விரட்டிய ஷுப்மன் கில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, களத்தில் இருந்த கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் 3 பவுண்டரியை விரட்டிய ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.