Advertisement
Advertisement
Advertisement

வீரரைத் தாக்கிய பயிற்சியாளர்; வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!

வீரர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் தவறான நடத்தை காரணமாக வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்கவை இடைநீக்கம் செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement
வீரரைத் தாக்கிய பயிற்சியாளர்; வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு!
வீரரைத் தாக்கிய பயிற்சியாளர்; வங்கதேச கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2024 • 08:04 PM

வங்கதேச அணி சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும் முழுமையாக இழந்ததுடன், ஒயிட்வாஷும் ஆனது. இதனையடுத்து அந்த அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2024 • 08:04 PM

அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதியும் தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இத்தொடருக்காக வங்கதேச அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த சந்திக ஹத்துருசிங்கவை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்துள்ளது.

Trending

மேலும் "உங்களால் ஒரு தேசிய வீரரை உடல்ரீதியாக தாக்க முடியாது," என்று  வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஃபரூக் அஹ்மத் தெரிவித்ததுடன், ஹதுருசிங்கவின் இடைநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இருப்பினும் ஹத்ருசிங்க எந்த வீரரை தாக்கினார் உள்ளிட்ட எந்தவொரு கூடுதல் விவரங்களையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது, 

கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஹத்துருசிங்க வங்கதேச அணியின் பயிற்சியாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டர். அவர் தலைமையிலான வங்கதேச கடந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், லீக் சுற்றுடனே வெளியேறி இருந்தது. அதன்பின் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. 

மேற்கொண்டு இது பாகிஸ்தானில் அவர்கள் பெற்ற முதல் வெற்றி மற்றும் 15 ஆண்டுகளில் முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடர் வெற்றியாகும். அத்ன்பிறகு தான் வங்கதேச அணி இந்தியாவுக்கு எதிரான படுதோல்வியைச் சந்தித்தது. சந்திக ஹத்துருசிங்கவின் இடைநீக்கம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பில் சிம்மன்ஸ் வங்கதேச அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

மேற்கொண்டு பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் வரை பில் சிம்மன்ஸ் வங்கதேச அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 26 டெஸ்ட் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பில் சிம்மன்ஸ் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களையும், 87 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு சில சர்வதேச அணிகளுக்கு இவர் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement