Advertisement

இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை - தமிம் இக்பால் ஓய்வு குறித்து நஜ்முல் ஹசன்!

ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் தமிம் இக்பாலை ஓய்வை அறிவிக்க இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் நஜ்முல் ஹொசைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 07, 2023 • 14:02 PM
BCB chief Nazmul Hasan trashes reports of Tamim Iqbal quitting due to his remarks
BCB chief Nazmul Hasan trashes reports of Tamim Iqbal quitting due to his remarks (Image Source: Google)
Advertisement

உலக கிரிக்கெட்டில் ஆசிய அணிகளுக்கு மிக நெருக்கத்தில், தற்பொழுது ஆசிய கோப்பை இருக்கிறது. அதேபோல ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக நெருக்கத்தில் இருக்கிறது. இந்த நிலையில் வங்கதேச அணியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் திடீரென தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். மேலும் அந்த அறிவிப்பின்போது அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

மிகப்பெரிய தொடர்கள் மிக நெருக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு மிக முக்கிய வீரர் ஓய்வு பெறுவது மட்டும் அல்லாமல் அவர் கேப்டனாகவும் இருப்பது வங்கதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை இந்த நேரத்தில் உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. அவரது இந்த திடீர் முடிவுக்கு வங்கதேச கிரிக்கெட் சேர்மன் நஸ்முல் ஹசன்தான் காரணம் என்பது போலான பேச்சுகள் எல்லாம் எழுந்தது. தற்பொழுது அவர் ஒரு நீண்ட விளக்கத்தின் மூலம் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Trending


இதுகுறித்து பேசிய அவர், “இங்கு யூகங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடமில்லை. ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வைத்துக்கொண்டு நாங்கள் இப்படி எல்லாம் செயல்படுவோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த முடிவை அவர் எடுத்திருந்தாலும் கூட இது மிகவும் உணர்ச்சி வசப்பட்ட ஒரு முடிவாக தான் நான் பார்க்கிறேன். அவரது ஓய்வுக்கு முக்கியமான காரணங்களாக சிலவைகள் இருக்கும். அது என்னவென்று நான் தெரிந்து கொள்வது நம் கிரிக்கெட் வாரியத்திற்கு நல்லது. 

அதே சமயத்தில் அவர் நமது ஒருநாள் கிரிக்கெட் திட்டங்களில் மிக முக்கியமான வீரராக இருப்பதால் அவர் இந்த முடிவில் மனம் மாறினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவருடைய இந்த திடீர் முடிவு அணிக்கு பாதகத்தை உருவாக்காது என்று நான் கூற மாட்டேன். நிச்சயம் அவருடைய இந்த விலகல் அணிக்கு பாதகத்தை உருவாக்கும். அவரது தலைமையின் கீழ் அணி விளையாடுவது மிகவும் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். தற்பொழுது இது அனைத்து தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் உணர்கிறோம்.

அவரிடமிருந்து இது போன்ற முடிவுகள் வரலாம் என்று எனக்கு எந்த துப்பும் வரவில்லை. அவருடன் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி நான் பேசினேன். அப்பொழுது அவர் சாம்பியன் கோப்பை வரை விளையாடுவேன் என்றுதான் சொல்லி இருந்தார். உலகக் கோப்பை நெருங்கி வருவதால் அவரை மாற்றுவது குறித்து எந்த பேச்சுக்குமே இங்கு இடம் கிடையாது. அவரைப் போன்ற ஒரு வீரரிடம் இருந்து இப்படி ஒரு முடிவு வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. நான் காலையில் இருந்து அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் ஆனால் முடியவில்லை. அவருடைய சகோதரர் உடன்தான் என்னால் பேச முடிந்தது. ஆனாலும் இன்னும் அவரை பிடிக்க முடியவில்லை.

அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் உணர்ச்சிவசப்பட்டு இப்படியான ஒரு முடிவை எடுக்கக் கூடாது. அனைத்து மிகவும் முக்கியமான வீரர். நான் அவருக்கு ஒரு செய்தி அனுப்பி உள்ளேன். அதற்கு அவர் பதில் அளிப்பாரா என்று நான் காத்திருக்கிறேன். இந்த விஷயத்தை நாம் நல்ல முறையில் தீர்க்க முடியும் என்று நம்புகிறேன். போட்டியின் நடுவில் கேப்டன் ஓய்வு பெறுவது நல்லது கிடையாது. நாங்கள் அவருக்கு ஒரு நல்ல பிரியா விடை கொடுக்க நினைக்கிறோம். ஆனால் இதற்குப் பிறகும் அவர்கள் விளையாட விரும்பவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement