
BCCI Announces Team India Squads For T20Is Against SA & Test Against England (Image Source: Google)
ஐபிஎல் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித், கோலி, பும்ரா ஆகிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல் தலைமையிலான 18 வீரர்களை கொண்ட அணியில் உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய ஐபிஎல்லில் அசத்திய இளம் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 2 சீனியர் வீரர்களும் ஐபிஎல்லில் அபாரமாக ஆடியதன் விளைவாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல்லில் சரியாக ஆடாதபோதிலும், அவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.