
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக விண்டீஸ் அணியுடனான தொடரில் பங்கேற்க உள்ளது. அடுத்த சில தினங்களில் வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டு முறை தகுதி பெற்ற இந்திய அணி, இரண்டு இறுதி போட்டிகளிலும் படுதோல்வியடைந்ததால், விண்டீஸ் அணியுடனான அடுத்த தொடரில் இருந்தே இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், புஜாரா, உமேஷ் யாதவ் போன்ற சீனியர் வீரர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும், 3 புதிய பேட்ஸ்மேன்களுக்கும், 3 புதிய பந்துவீச்சாளர்களுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வின்னப்பிக்குமாறு முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.