
கடந்த ஐபிஎல் 15ஆவது சீசனுக்குப் பிறகு இங்கிலாந்து தொடரில் மட்டுமே கோலி பங்கேற்றார்.அந்த இங்கிலாந்து தொடரில் கோலி சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடர்களிலும் கோலி பங்கேற்காமல் ஓய்வுக்கு சென்றார். இதனால், கோலி அடுத்து ஆசியக் கோப்பையில் தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே, அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பையில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் கோலி அபாரமாக விளையாடி அசத்தி வருகிறார். இதுவரை மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்களை கோலி அடித்துள்ளார். கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலி அரை சதம் அடித்தப் பிறகு, பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த கோலி, “நான் டெஸ்ட் அணிக் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு, எனக்கு மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும்தான். எனது செல்போன் எண் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆனால், யாரும் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை. தோனி மீது நான் கொண்டிருந்த மரியாதை, மதிப்பு அனைத்தும் உண்மையானது. என்னால் அவர் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை. அதேபோல் அவரால் நான் பாதுகாப்பானவராக உணர்ந்ததில்லை’’ எனக் கூறினார்.