Advertisement

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!

இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது

Advertisement
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்!
இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணையும் திலீப்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2025 • 01:19 PM

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஆகஸ்ட் 04ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 28, 2025 • 01:19 PM

இதில் அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக்கேப்டனாக ரிஷப் பந்த்தும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்கள் சாய் சுதர்ஷன், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் கருண் நாயர், குல்தீப் யாதவ் மற்றும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு கிடைத்துத்துள்ளது. இருப்பினும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், சர்ஃப்ராஸ் கான், அக்ஸர் படேல் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இப்போட்டிக்காக இந்திய அணி தயார்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அணியின் துணை பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். மேலும் இவர்களுக்கான மாற்று பயிற்சியாளர்களையும் பிசிசிஐ அறிவிக்காமல் இருந்தது. 

இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக மீண்டும் திலீப் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின் அடிப்படியில், பிசிசிஐ வெளிநாட்டு பீல்டிங் பயிற்சியாளரைத் தேடிக்கொண்டிருந்தது, ஆனால் பொருத்தமான வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் காரணமாக திலீப் மீண்டும் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளார். 

Also Read: LIVE Cricket Score

மேலும் திலீப் மேலும் ஒரு வருடம் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும், எதிர்வரும் இங்கிலாந்து தொடர் முதல் அவரது பதவிக்காலம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திலீப் பற்றிப் பேசினால், அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார், முந்தைய அணிகளைத் தவிர தற்போதைய கிரிக்கெட் வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடனும் அவர் நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement