
இந்திய அணி வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ நேற்றைய தினம் அறிவித்தது. இதில் ஆச்சரியப்படும் வகையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரது ஒப்பந்தகளை ரத்து செய்து பிசிசிஐ அதிரடி கட்டியது. காரணம் இவர்கள் இருவரும் பிசிசிஐ-யின் உத்தரவையும் மீறி உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையில் விளையாடாததே என்று கூறப்படுகிறது.
அதேபோல் மற்ற சில வீரர்களும் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஆர்வம் கட்டியதோடு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகியது மிகப்பெரும் சிக்கல்கலை உருவாக்கியது. ஏனெனில் வீரர்கள் உள்ளூர் போட்டிகளைத் தவிர்த்து அதிக பணம் ஈட்டும் ஐபிஎல் தொடரின் மீது ஆர்வத்தை காட்டுவது பிசிசிஐக்கு மிகப்பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதுதான்.
ஏனெனில் இதற்குமுன் இதேபோன்று தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் தங்களது சொந்த அணிக்காக விளையாடாமல் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஃபிரான்சைஸ் டி20 லீக்குகளில் விளையாட ஆர்வம் காட்டினர். அதன் விளைவு தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி கூட பெற முடியாமல் வெளியேறியது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் அடையாளமாக பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை இருமுறை ஒருநாள் உலகக்கோப்பையை வென்றுள்ள நிலையில், தற்போது உலகக்கோப்பை தொடருக்கு தகுதிகூட பெறமுடியாமல் தவித்து வருகிறது.