
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
முன்னதாக இத்தொடருக்கும் தயாராகும் வகையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 3-0 என்ற கணக்கில் இந்தியாவிடம் படுதோல்வியை தழுவியதுடன் ஒயிட்வாஷும் ஆனது.
இதனால் இங்கிலாந்து அணி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எவ்வாறு செயல்படும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பென் டக்கெட் ஃபீல்டிங்க் போது காயமடைந்தார். அதன்பின் களத்தை விட்டு வெளியேறிய அவர், பிறகு பேட்டிங்கின் போது அசௌகரியமாக காணபட்டார்.