
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் போட்டிகள் வருகின்ற 31ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வைத்து தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதம் இருப்பதால் அனைத்து அணி வீரர்களும் முழு வீச்சில் தயாராக துவங்கி விட்டனர். இதற்காக உலகெங்கிலும் இருந்து ஐபிஎல் அணியில் விளையாடக்கூடிய வீரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக விளையாடுகிறார்கள்.
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் என பிற நாடுகளில் இருந்து வீரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ். மற்றும் மொயின் அலி ஆகியோர் இன்று சென்னை வந்தடைந்தனர்.