
கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 276 ரன்களை குவிக்க பின்னர் இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது பேட்ஸ்மேன்களின் மிகச்சிறப்பான பங்களிப்பு காரணமாக 48.4 ஓவர்களில் 5 விட்டுகளை மட்டும் இழந்து 281 ரன்கள் குதித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய முகமது ஷமி, “இந்த போட்டியில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் நான் தொடர்ச்சியாக பெரிய ஸ்பெல்லை வீசினேன். அணியின் கேப்டன் கேட்டுக்கொண்டதாலும், போட்டியின் சூழ்நிலையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த வகையில் நான் ஆரம்பத்திலேயே நான்கு ஐந்து ஓவர்கள் புதிய பந்தில் வீசியதில் மிகவும் மகிழ்ச்சி.