
Bowler Becoming A Test Captain Will Be Challenging – Bharat Arun (Image Source: Google)
தோனிக்கு பிறகு 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார்.
இதையடுத்து யார் அடுத்த கேப்டன் என்ற விவாதம் பரபரப்பாக நடந்துவருகிறது. வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளார்.
ஆனால் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கேஎல் ராகுல், ரிஷப் பந்த் என பல பெயர்கள் கேப்டன்சிக்கு முன்னாள் வீரர்கள் பரிந்துரைத்துவருகின்றனர். பேட்ஸ்மேன்கள் தான் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டுமா? பந்துவீச்சாளர்கள் நியமிக்கப்படக்கூடாதா என்ன? என்ற கேள்வியுடன் ஜஸ்ப்ரித் பும்ராவின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.