Advertisement

வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!

இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 04, 2023 • 22:15 PM
 வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்!
வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலை - பிராண்டன் மெக்கல்லம்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து மோசமாக ஆட்டதால் கோப்பையை தக்க வைக்க முடியாமல் முதல் அணியாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக விளையாடப் போகும் தொடர்களில் வரும் 2024 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஜோ ரூட் தலைமையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிராண்டன் மெக்கல்லம் ஆகியோர் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அந்த அணுகு முறையை பின்பற்றி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை அடித்த நொறுக்கிய அந்த அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரையும் சமன் செய்தது.

Trending


எனவே அதே அணுகுமுறையுடன் இந்தியாவையும் அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா அதன் பின் கடந்த 11 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியில் சந்திக்காமல் வீர நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் அத்தொடரில் இந்தியாவை தோற்கடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற தங்களுடைய அதிரடியான அணுகுமுறையை தொடரலாம் என்பதை உறுதி செய்து கொள்வேன் என்று பிராண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தரமான இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான மிகப்பெரிய சவால் எங்களுக்கு காத்திருக்கிறது. அத்தொடருக்காக நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். ஏனெனில் உங்களுடைய திறமைகளை தரமான அணிக்கு எதிராக நீங்கள் சோதிக்க விரும்புவீர்கள். 

அது போன்ற நிலைமையில் இந்தியா அவர்களுடைய சொந்த மண்ணில் மிகவும் வலுவான அணி என்று நான் நம்புகிறேன். எனவே அத்தொடர் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஒருவேளை அதில் வெற்றி பெற்றால் இப்போது விளையாடும் இதே ஸ்டைலை நாங்கள் தொடர்ச்சியாக பின்பற்றுவோம் என்பது எனக்கு தெரியும்.

அதிரடியான அணுகுமுறையை பின்பற்றிய எங்களுக்கு குறுகிய காலத்தில் விரைவாக வெற்றி கிடைத்தது அதிர்ஷ்டமாகும். மேலும் கடந்த 18 மாதங்களில் எங்களின் சில வீரர்கள் தங்களுடைய திறமைகளை உடைத்து மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அந்த வகையில் எங்களுடைய வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வருவதே என்னுடைய வேலையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement