
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் ஐபிஎல்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ரோஹித் சர்மா, கேகேஆர் அணிக்கெதிரான போட்டியின் போது அந்த அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் பேசும் காணொளியானது இணையத்தில் தீயாய் பரவியது. இதைத்தொடர்ந்து ரோஹித், மும்பை அணி வீரர் தவால் குல்கர்னியுடன் பேசும்போது ஒளிபரப்பாளர்கள் ரோஹித் பேசுவதைப் பதிவு செய்ய, அதனை அறிந்து ரோஹித் சர்மா 'தயவு செய்து இங்கயும் வந்து எடுக்க வேண்டாம்' என்பதுபோல் கையெடுத்துக் கும்பிட்டிக் கேட்டிந்தார்.
அக்காணொளியும் இணையத்தில் வைரலான நிலையில், நேற்றைய தினம் ரோஹித் சர்மா தனது சமூக வலைதள பக்கத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக, இப்போதெல்லாம் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக்குள் கேமாராக்கள் அதிகமாக ஊடுருவி வருகிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரோஹித் சர்மாவின் கருத்துக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தங்களது விளக்கத்தைக் கொடுத்துள்ளது.