-mdl.jpg)
இங்கிலாந்து அணி 24 நாட்களில் 12 டி20 போட்டிகள் 9 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளது. அதிலும் கடந்த இரண்டு வாரத்தில் 6இல் இரண்டு ஒருநாள் போட்டிகள் விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3ஆவது முக்கியமான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் 1-1 என தொடர் சமநிலையில் முடிந்தது. இந்நிலையில் இத்தொடர் முடிவடைந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், பயிற்சி செய்ய நேரமில்லாததால் விரக்தியாக உள்ளதென தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது போல தீவிரமான மனநிலை தற்போது இல்லை. முதல் 20 ஓவரில் 10 ஓவரில்தான் நாங்கள் அதே உற்சாகத்துடன் இருந்தோம். ஒரு அணியாக எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போட்டி மனப்பான்மையுடன் எங்களது விளையாட்டினை தீவிரமாகவும் சிறப்பாகவும் விளையாடுவோம்.