
கடந்தாண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா அணி ஆஃப்கானிஸ்தான் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. மேலும் இத்தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவும் இருந்தது. ஆனால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப்பிடித்த பின பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உரிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதை எதிர்க்கும் விதமாக ஆஃப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ரத்து செய்தது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான், ஆஃப்கானிஸ்தான் உடன் விளையாடுவது ஆஸ்திரேலியாவுக்கு சங்கடத்தை கொடுத்தால் பிபிஎல் தொடரில் விளையாடி நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால் அதில் எனது எதிர்கால பங்களிப்பு குறித்து நிச்சயம் பரிசீலிப்பேன்” என்று தெரிவித்ததுடன், கடந்த பிக் பேஷ் லீக் தொடரிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து ஆஸ்திரேலியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த டி20 தொடரையும் ஆஸ்திரேலிய அணி ரத்து செய்வதாக இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.