
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் அஷுதோஷ் சர்மா அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் தடுமாறியது.
அதிலும் குறிப்பாக அறிமுக வீரர் தனுஷ் கோட்யான் தொடர்ந்து பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார். பின் 24 ரன்களில் தனுஷும், 29 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் 18, ரியான் பராக் 23 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இறுதியில் அந்த அணி வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 34 ரன்கள் தேவை என்ற சூழலிற்கு தள்ளப்பட்டது.